Monday 12 January 2009

என் சினிமாவுக்கு உதவிய சித்தாள்கள்..?

இந்த தொடரை இதோட நிறுத்திக்கலாம்னு உத்தேசித்திருக்கிறேன்...!
காரணம்....,

இருங்க..! அதுக்கு முன்னாடி என் தோழமைகள் அனைவருக்கும்

என் இனிய புத்தாண்டு....,
பொங்கல் நல்வாழ்த்துகள்..!


நான் இப்போ இயக்கிகிட்டிருக்கிற 'பால்' திரைப்படம் பாதியில் அப்படியே நின்னுபோச்சுங்க...! வழக்கமா.... சினிமாவுல நொந்துகொள்கிற Finance பிரச்னைதான்.

100ஆண்டுகால இந்திய.....75வருடகால தமிழ் திரைப்பட வரலாற்றில் திருநங்கைகளை மையப்படுத்திய.....ஏன் ஒரு திருநங்கையையே கதாநாயகியாய் கொண்ட முதல் திரைப்படம் என்கிற அடிப்படையில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளும்...இந்தியா முழுவதும் உள்ள பத்திரிக்கைகளும்,மீடியாக்களும் கொண்டாடி...எங்களை புளகாங்கித புல்லரிப்பில் திளைக்க வைத்திருக்க.....

படம் பாதியில் நின்றுபோய்.....என் உதவியாளர்களெல்லாம் மன உளைச்சலில் வருத்தம் தோய்ந்த முக்ககுறிகளுடன் அலுவலகத்தில் என் எதிரே புலம்பியபடி நடமாடிக்கொண்டிருக்க....

நான் இப்படி ஒரு நையாண்டித்தொடரை எழுதிக்கொண்டிருப்பது....கூச்சமாய் உணர்கிறேன். விடியும் என்ற நம்பிக்கையுடன் கொஞ்ச காலம் இதை நிறுத்தி வைப்போம்..!

நிற்க....நாளை போகி..! பழையன கழிதல்..! ஆனால் முரண்பாடாய் ஒன்று தோன்றியது. விளைவு....பரணில் தேடி தூசுதட்டி எடுத்த சில போகிப்பொருள்களை எரிப்பதற்குப்பதில்...நீங்கள் கொறிப்பதற்கு கொடுத்தாலென்ன...?

சிவா.....எதாவது தொடர்ந்து எழுதுங்க...நிறுத்தாதீங்க..! என்று சொன்ன என் தோழர் ஜெயகாந்தனிடம் கொடுத்து....இடுகையிட சொல்லிவிட்டு செல்கிறேன். நாலஞ்சு நாள் கழிச்சு வரேன்.....

எதை எதை எடுத்து போடறாரோ...படிச்சுட்டு பின்னூட்டம் அடிச்சு வையுங்க..! வந்து பார்க்கிறேன். மீண்டும் சந்திப்போம்...! வாழ்த்துகள்..!

கூடவே உலகின் எந்த மூலையிலிருந்தாலும்.....பைனான்சியரோ....,தயாரிப்பாளரோ....., கிடைத்து 'பால்' படம் மீண்டும் வளர....வாழ்த்துங்கள்.....
உங்கள் நல்வாழ்த்து பலிக்க கடவ...!


2 comments:

சரவணகுமரன் said...

:-((

Anonymous said...

படம் மீண்டும் வளர வேண்டும் என வாழ்த்துகின்றேன்..